Video

Napoleon Hill QUOTES (பொன்மொழி)

Featured

“Whatever the human mind can conceive, it can achieve.”

“மனித மனம் கருத்தரிக்கும் ஒவ்வொன்றையும்,

அது கைப்பற்ற முடியும்.”

                                                                            — Napoleon Hill https://www.youtube.com/watch?v=Ub2GQXAXuOA

Napoleon Hill Think and Grow Rich 3 Mastery Laws of Success

CONCEIVE, BELIEVE, ACHIEVEIt was Napoleon Hill who said, “Whatever the mind can conceive and believe, the mind can achieve.” Hill is most famously known for a book called, Think and Grow Rich. DEFINITENESS OF PURPOSE: Definiteness of Purpose is the starting point of all achievement. Don’t be like a ship without a rudder, powerless and directionless. Decide what you want, find out how to get it, and then take daily action toward achieving your goal. You will get exactly and only what you ask and work for. Make up your mind today what it is you want and then start today to go after it! Do it now!Success people move on their own inititative, but they know where they are going before they start.THE MASTERMIND PRINCIPLE:The Mastermind principle consists of an alliance of two or more minds working in perfect harmony for the attainment of a common definite objective. Success does not come without the cooperation of others.  

                                     — thanks http://www.thecoconutcode.com

சிதம்பர ரகசியம்

 Nativeplanet»Tamil»Travel Guide

சிதம்பர ரகசியம் என்றால் என்ன – அது சிதம்பரம் கோவிலுக்குள் தான் உள்ளதா?

https://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-what-is-chidambara-ragasiyam-facts-about-chidambara-ragasiyam-004725.html#goog_rewarded

யாராவது நம்மிடம் ஒரு விஷயத்தை மறைத்தால், உடனே நாம் ‘ஆமா, இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா?’ என்று கேட்போம். இப்படி கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு வார்த்தை ‘சிதம்பர ரகசியம்’. ஆனால் இந்த ரகசியத்தின் முழு அர்த்தத்தையும் உணர்ந்தவர் ஒரு சிலர் மட்டுமே. அது என்ன சிதம்பர ரகசியம் என்று நாமும் இன்று தெரிந்துக் கொள்வோம்!

கட்டிட அமைப்போ, பொன், பொருளோ அல்ல சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம் என்ற பெயரில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலை பற்றிய செய்திகளை பலரும் கூறி வருகின்றனர். சிதம்பர கோவிலும், அதன் புவியியல், கட்டிட அமைப்பு, அறிவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களை பெரும்பாலான மக்கள் சிதம்பர ரகசியம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலரோ சிதம்பர கோவிலுக்குள் யாரும் தெரியாத விலைமதிக்கமுடியாத பொக்கிஷங்கள் இருப்பதாகவும் அவையே சிதம்பர ரகசியம் என்றும் கூறுகின்றனர்.

chidambararagasiyam temple
ஊட்டி, கொடைக்கானலை விடுங்க – தமிழ்நாட்டின் இந்த மலைவாசஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க – இப்போ இது தான் டிரெண்டு!

ஊட்டி, கொடைக்கானலை விடுங்க – தமிழ்நாட்டின் இந்த மலைவாசஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க – இப்போ இது தான் டிரெண்டு!

சிவபெருமான் தான் அந்த சிதம்பர ரகசியமா?

இந்து சமய நூட்களின் படி தை மாதத்தில் ஒரு நாள் சிவபெருமான் தன்னுடைய 3000 பூதகணங்களுடன் தில்லை கோவிலுக்கு வருகை தருகிறார். ஆனந்த தாண்டவமாக காட்சி தருவதற்காக தில்லை நோக்கி வந்த சிவபெருமானின் 3000 பூதகணங்களில் 2999 பூதகணங்கள் ஒரு இடத்தில் இருந்தன. ஒரேயொரு பூதகணத்தை மட்டும் காணவில்லை, அதே போல எங்கு தேடியும் கிடைக்கவும் இல்லை. அப்போது அது நான் தான் நடராஜர் என்று அசரீரி கேட்டதாக கூறுகிறது. அப்படி பார்த்தல் சிதம்பர கோவிலில் நீக்கமற நிறைந்துள்ள சிவபெருமான் தான் அந்த ரகசியம் என்று சிலர் கூறுகின்றனர்.

சிதம்பர கோவிலில் ரகசிய பீடம்

தில்லையம்பல நடராசன் சந்நதிக்கு அருகில் சிதம்பர ரகசிய பீடம் அமைந்துள்ளது. சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. பொன்னாலான வில்வ மாலை சாத்தப்பட்டு சிதம்பர ரகசிய காட்சி பக்தர்கள் பார்வைக்கு காண்பிக்கப்படுகிறது.

chidambararagasiyam

சென்னையில் ஓலா, உபெர் இயங்காது – இந்த புதிய செயலியில் தான் டாக்ஸி புக் பண்ணனும்!

சென்னையில் ஓலா, உபெர் இயங்காது – இந்த புதிய செயலியில் தான் டாக்ஸி புக் பண்ணனும்!

எந்த உருவமும் இருக்காது

திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். பரிபூரணமான வெட்டவெளியே இதன் ரகசியமாகும். இந்த வாயிலில் உள்ள திரை அகற்றுப்பட்டு ஆரத்தி காட்டப் படும்போது, அங்கு சிலையோ வேறு காட்சிகளோ தென்படாது. தங்கத்தால் செய்யப்பட்ட ‘வில்வ தளமாலை’ ஒன்று தொங்கும் காட்சிமட்டுமே தெரியும். இதனுள்ளே வேறு திருவுருவம் ஏதும் தோன்றாது.

null

ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது

ஆகாய உருவத்தில் இறைவன் மூர்த்தி ஒன்றும் இல்லாமல் வில்வ தளம் தொங்குவதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் முடிவும், முதலும் இல்லாமல் இருக்கின்றார் என்பது தான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது. முடிவும் கிடையாது. வெட்ட வெளியில் அவனை உணர மட்டுமே முடியும் என்பதே இதன் முழு அர்த்தம். இந்த சிதம்பர ரகசியத்தை வேண்டி கொண்டு திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால் நினைத்தபடி நினைத்த பலன் கிடைக்கும்.

chidambararagasiyam

பிப்ரவரி முதல் பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் – மார்ச்-ஏப்ரலில் பற்றாக்குறை தீவிரமடையும்!

பிப்ரவரி முதல் பெங்களூருவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் – மார்ச்-ஏப்ரலில் பற்றாக்குறை தீவிரமடையும்!

மனக்கண்ணால் உணர்வதே சிதம்பர ரகசியம்

உயிர்களால் உணர முடியாததும், புலன்களால் அறிய முடியாததுமே சிதம்பர ரகசியம். சித்தத்தை வென்ற சித்தர்களுக்கே இது வசப்படும். மனக் கண்ணால் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, திரை என்பது மாயை. திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்’ என்பதே விளக்கம். இந்த அருவ நிலைதான் இங்கு மூலஸ்தானம். அருவ வடிவமாக, இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறான் என்பதை உணர்த்துவதே இந்த வெட்டவெளி ஆகும். இப்படி ஞான நிலையில் சிவனை அடைவதே சிதம்பர ரகசியம்!

Radhae Krishna

கிருஷ்ணர் ராதையை காதலித்தாலும் திருமணம் செய்யாதது ஏன் என்ற ரகசியம் தெரியுமா?

இங்கே நாம் கடவுளின் கதை பற்றி பார்க்கப்போகிறோம். ஆம். கிருஷ்ணர் மற்றும் ராதைக்கு இடையே இருநு்த உறவு பற்றி பார்க்கப் போகிறோம்.

By Manimegalai

Published: Tuesday, September 4, 2018, 15:32 [IST]

கிருஷ்ணர் என்ற பெயரைச் சொன்னாலே அடுத்து ஒட்டிப் பிறந்த வார்த்தை போல நம் மனதுக்குள் ஓடும் மற்றொரு வார்த்தை ராதை என்பது தான். இவர்கள் இருவருக்கும் அப்படி என்ன தான் உறவு இருந்தது. காதலுக்கு உதாரணமாக இருவரும் சொல்லப்பட்டாலும் கிருஷ்ணர் ராதையைத் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அதேசமயம் கிருஷ்ணர் மறற் பெண்களைத் திருமணம் செய்து கொண்ட பின்னரும்கூட, இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு தொடர்ந்தது. இதற்கு என்ன தான் அர்த்தம் என்ற குழப்பம் இல்லதாவர்களே இருக்க முடியாது. அது என்னவென்று இங்கு பார்ப்போம்.

கிருஷ்ணர் ராதையை காதலித்தாலும் திருமணம் செய்யாதது ஏன் என்ற ரகசியம் தெரியுமா? அங்கதான் டுவிஸ்ட்

ராதையின் கேள்வி

ஒரு நாள் ராதாவே கிருஷ்ணரிடம் கேட்டார் ‘ கிருஷ்ணா! நீங்கள் ஏன் ராதாவை காதலிக்கிறீர்கள். ஆனால் திருமணம் என்று வருகுிற போது மட்டும் என்னை விட்டு மற்ற பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்று. அதற்கு கிருஷ்ணர் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பதிலை கிருஷ்ணர் ராதையிடம் சொன்னாராம்.

கிருஷ்ணர் ராதையை காதலித்தாலும் திருமணம் செய்யாதது ஏன் என்ற ரகசியம் தெரியுமா? அங்கதான் டுவிஸ்ட்

கிருஷ்ணரின் பதில்

திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கு இடையே நடக்கக்கூடிய ஒன்று. அது ஒரு ஒப்பந்தம். ஆனால் அது எப்போதுமே இரண்டு உயிராகத்தான் இருக்க முடியும். ஆனால் காதல் என்பது அப்படியல்ல. அது ஒரே உயிராக மட்டும் தான் இருக்க முடியும். நாம் இருவரும் எப்போதும் ஒரே உயிர் தான்.இரண்டு நபர்கள் அல்ல என்று சொன்னாராம். நமக்கு இடையே தேவலோக பந்தம் இருக்கிறது. ஆனால் பூலோக திருமணம் நம் இருவருக்கும் சாத்தியமில்லாத ஒன்று என்று கூறியிருக்கிறார் கிருஷ்ணர்.

கிருஷ்ணர் ராதையை காதலித்தாலும் திருமணம் செய்யாதது ஏன் என்ற ரகசியம் தெரியுமா? அங்கதான் டுவிஸ்ட்

கிருஷ்ணரின் சத்தியம்

நம்மால் கணவன் மனைவி ஆக முடியாது என்று கிருஷ்ணர் சொன்னாலும், ராதைக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால், இந்த உலகத்தில் யார் ஒருவர் என்னைப் பற்றி நினைத்தாலும் என்னுடைய பெயருக்கு முன்னால் உன்னுடைய பெயர் தான் அவர்களுக்கு நினைவுக்கு வரும். என் பெயருக்கு முன்னால் ராதைகிருஷ்ணர் என்று உன்னுடைய பெயரைத் தான் சொல்வார்கள். என்னு்ய மற்ற எந்த மனைவியுடைய பெயரும் ஞாபகம் வராது. ஏனென்றால் உன்னுடைய அளவிட முடியாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத காதலுக்கு முன் மற்ற எதுவும் இவ்வுலகில் பெரியது இல்லை.

கிருஷ்ணர் ராதையை காதலித்தாலும் திருமணம் செய்யாதது ஏன் என்ற ரகசியம் தெரியுமா? அங்கதான் டுவிஸ்ட்

பால்ய நட்பு

ராதை மற்றும் கிருஷ்ணருக்கு இடையே இருந்த காதலுக்கு பாராக்கியா என்று பெயருண்டு. கணவன் மனைவி போல் வாழ்ந்தாலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ராதை மற்றொருவருக்கு மனைவியாகி விட்ட பின்னரும் கூட கிருஷ்ணரை மறக்க முடியவில்லை. ஏனெனில் இருவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தனர். அதனால் ராதையால் கிருஷ்ணரை மறக்கவே முடியவில்லை. எப்போதுமே கிருஷணருக்கு ஓடி வந்து ராதை நிற்பாள். கிருஷ்ணரும் அவளுடன் விளையாடுவார். எந்த கட்டுப்பாடுகளும் இன்றி, எந்த சங்கடமுமு் இல்லாமல் ஆண், பெண் (கிஷோரா- கிஷோரி) விளையாட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

கிருஷ்ணர் ராதையை காதலித்தாலும் திருமணம் செய்யாதது ஏன் என்ற ரகசியம் தெரியுமா? அங்கதான் டுவிஸ்ட்

மற்றொரு கதை

இப்படி ஒரு விஷயம் ஓடிக் கொண்டிருக்க மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், கிருஷ்ணர் சிறு வயதில் இருக்கும் பொழுது, ராதை தான் கிருஷ்ணனுக்கு துணையாக வீட்டில் இருப்பாளாம். அப்படியே இருவரும் பிருந்தாவனம் முழுக்க நடந்து கொண்டு, சுற்றித் திரிவார்களாம். அப்படி சுற்றித் திரிகின்ற வேளையில், இருவரும் ஆல மரத்தடியில் இருவரும் இளைப்பாறிக் கொண்டிருந்தார்களாம். இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்ட நிலையில் இருந்த நிலையில் பிரம்மன் ஒரு முனிவர் மற்றும் விருந்தினர்களுடன் தேவலோகத்தில் இருந்து வந்து இறங்கினாராம். அவர்களுக்கு இடையே திருமணம் நடந்ததாம். அதில் பிரம்மனும் தன்னுடைய பங்குக்கு தன்னுடைய கலைத்திறமையைக் காண்பித்தாராம். இப்படியும் ஒரு கதை உண்டு.

கிருஷ்ணர் ராதையை காதலித்தாலும் திருமணம் செய்யாதது ஏன் என்ற ரகசியம் தெரியுமா? அங்கதான் டுவிஸ்ட்

திருமணத்துக்குப் பின்

அப்படி மரத்தடியில் இருவருக்கும் திருமணம் வேத மரபின் படி முடிந்தது. அக்னி வலம் வரும்பொழுது, ராதையின் சேலை நுனி கிருஷ்ணருடைய வேஷ்டியுடன் முடிஞ்சுப் போடப்பட்டு இருந்தது. திருமண வைபோகம் முடிந்ததும் அங்கிருந்த அனைவரும் இடது புறமாக நகர்ந்து நின்று கொண்டனர். அப்போது எல்லோரும் எதிர்பார்த்தது போல் இல்லாமல், மீண்டும் கிருஷ்ணர் சிறு பிள்ளையாகிவிட, ராதை அவரை அவரின் தாய் யசோதையிடம் ஒப்படைத்துவிட்டு, தன்னுடைய வீட்டுக்கு நடக்க ஆரம்பித்து விட்டார்.

                            Thanks to

                           Manimegalai and boldsky

சீக்கியம்

சீக்கியம் (ਸਿੱਖੀ, Sikhism) அல்லது சீக் (சீக்கியர், என்ற சொலுக்கு “சீடர்”, அல்லது “கற்பவர்” என்று பொருள்படும்[1][2]) என்பது இந்தியத் துணைக் கண்டத்தின் பஞ்சாப் பகுதியில் பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தோன்றிய தர்ம சமயமாகும்.[3][4] உலகில் உள்ள முதன்மை சமயங்களில் இளைய சமயங்களில் இதுவும் ஒன்றாகும். சீக்கிய சமயத்தின் அடிப்படையான நம்பிக்கைகள், குரு கிரந்த் சாஹிப் நூலில் உள்ளன, மனிதகுலத்தின் ஒற்றுமை, தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவது, அனைவரின் நலனுக்கும் சமூக நீதிக்காக போராடுவது, மற்றும் நேர்மையான நடத்தை ஆகியவற்றை பொதுவாக வலியுறுத்துகிறது.[5][6][7] இது ஓரிறைக் கொள்கையை உடைய சமயமாக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த குரு நானக் அவர்களால் 15ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சமயமாகும்.[8] இச்சமயம் குரு நானக்கிற்குப் பிறகு தோன்றிய பத்து சீக்கிய குருக்களாலும் முன்னேற்றப்பட்டது. இது சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக உள்ளது.[9][10] முதல் நான்கு மதங்களாக முறையே கிறித்தவம்இசுலாம்இந்துபௌத்தம் போன்ற மதங்கள் இருக்கின்றன.

சீக்கிய சமயம் சிம்ரனை (குரு கிரந்த சாகிப்பின் வார்த்தைகளில் தியானம்) வலியுறுத்துகிறது, இது கீர்த்தனையோ அல்லது உள்மனதில் உச்சாடனை (கடவுளுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லுதல்) செய்வதன் மூலம் கடவுளுடைய பிரசன்னத்தை உணரும் வழிமுறை என்கிறது,  மேலும் “ஐந்து திருடர்களான” (காமம், ஆத்திரம், பேராசை, பற்று, அகந்தை) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி,  மதச்சார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்வோடு கை கோர்த்து பிணைக்கப்பட வேண்டும் என்கிறது.[11] குரு நானக் கற்பித்தவை  “செயலில், ஆக்கபூர்வமான, நடைமுறை வாழ்க்கை” அதில்   “உண்மை, விசுவாசம், சுய கட்டுப்பாடு தூய்மை”   மேலும் சிறந்த மனிதர் என்பவர் “கடவுளோடு ஒன்றிணைந்து, அவருடைய விருப்பத்தை அறிந்து, அதைத் தொடருவார்” என்று கூறுகிறார்.[12

குரு நானக் தேவ் மற்றும் அவரது வழித்தோன்றல்களின் போதனைகளே சீக்கிய சமயத்தின் மூலமாகும். சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தனது 30ம் வயதில் அறிவு விளக்கம் பெற்ற பிறகு, யாருடைய பாதையை நான் பின்பற்ற வேண்டும் இந்து மதமா அல்லது முஸ்லீமா, நான் கடவுளின் பாதையை பின்பற்ற வேண்டும். கடவுள் இந்து மதமும் அல்ல முஸ்லிம் மதமும் அல்ல, நான் பின்பற்ற வேண்டிய பாதை கடவுளின் பாதையாகும் என்று மக்களிடையே கூறினார். பின் அவர் தன் கருத்துகளை பயணங்கள் செய்து மக்களிடையே கொண்டு சேர்த்தார். இவருக்குப் பின் தோன்றிய சீக்கிய குருக்கள் சீக்கியத்தினை மேம்படுத்தினர்.

சீக்கியம் அனைத்து மனிதர்களும் சமத்துவமானவர்கள் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. அத்துடன் சாதி, சமயம், பாலினம் போன்ற பாகுபாடுகளை நிராகரித்து இறைவனை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது.

குரு என்ற சொல்லானது சமஸ்கிருதத்தின் குரு என்ற சொல்லிருந்து தோன்றியதாகும். இச்சொல்லானது ஆசிரியர், வழிகாட்டுனர் மற்றும் அறிவுரையாளர் என்று பொருள்தருவதாகும். பொ.ஊ. 1469 முதல் 1708 வரையில் சீக்கியத்தின் மரபுகள் மற்றும் தத்துவங்கள் பத்து குருக்களால் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு குருவும் சீக்கிய மதத்தின் கோட்பாடுகளினை வரையரை செய்து அதன் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தனர். சீக்கிய சமயத்தினை தோற்றுவித்த குரு நானக் முதல் குருவாவர். அவருக்குப்பின் ஒன்பது குருக்கள் தோன்றினர். பத்தாவது குருவான கோவிந்த சிங் தனக்குப் பின் குருவாக சீக்கிய குருக்களின் போதனைகளை எழுத்துவடிவமாக தொகுக்கப்பட்ட நூலினை அறிவித்தார். அதனால் குரு கிரந்த் சாகிப் என்று அழைக்கப்படும் அந்நூலானது பதினோராவது குருவாக சீக்கியர்களால் மதிக்கப்படுகிறது. இந்நூல்  சீக்கியர்களுக்கான ஆன்மீக வழிகாட்டியாக வேதா வாக்காக, தனித்துவமான குருவின் நேரடி உருவகமாக மாறியது.[13][14][15]

குருநானக் முதல் குரு கிரந்த சாகிப் வரையான சீக்கியகுருக்களின் பட்டியல்:[16]

  1. குரு நானக் சாகிப்
  2. குரு அங்கட் சாகிப்
  3. குரு அமர் தாஸ் சாகிப்
  4. குரு ராம் தாஸ் சாகிப்
  5. குரு அர்ஜூன் சாகிப்
  6. குரு அர்கோவிந்த் சாகிப்
  7. குரு ஹர் ராய் சாகிப்
  8. குரு ஹர் கிருஷ்ணன் சாகிப்
  9. குரு தேக் பகதூர் சாகிப்
  10. குரு கோபிந்த் சிங் சாகிப்
  11. குரு கிரந்த சாகிப்

சீக்கிய சமயத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில், எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களும் (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமாக ஐந்து பொருட்களை எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை “ஐந்து கே” க்கள், அல்லது “பஞ்ச காக்கர்/காக்கி” என்று சொல்கிறார்கள்.இந்த ஐந்து சின்னங்களாவன

1. கேஷ் (வெட்டப்படாத முடி, இதை பொதுவாக சுருட்டி சீக்கிய தலைப்பாகையான, டாஸ்டர் என்பதன் உள்ளே வைக்கப்படும்.) 2. கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக தலைப்பாகையின் கீழ் அணியப்படும்.) 3. கச்சாஹெரா (இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.) 4. கடா (இரும்பாலானா கைவளையம், இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை தலைப்பாகையில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.) 5. கிர்ப்பான் (வளைந்த கத்தி)

சாகிப்தா சோரவார் சிங் (Zorawar Singh ) (பிறப்பு:28 நவம்பர் 1695 – இறப்பு 26 டிசம்பர் 1705) சீக்கிய சமயத்தின் பத்தாவது மற்றும் இறுதி குருவான குரு கோவிந்த் சிங்கின் நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர் ஆவார். சீக்கிய சமயத்தில் சோரவார் சிங்கும் அவரது இளைய சகோதரர் பதே சிங்கும் மிகவும் புனிதமான தியாகிகள் என்ற புகழைப் பெற்றவர்கள். சீக்கியர்கள் இவரது பெயருக்கு முன்னாள் சாகிப்சதா (இளவரசன்) இட்டு அழைப்பர்.

மே 1705-இல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆனையின் படி, சீக்கியர்களின் அனந்த்பூர் சாஹிப் நகரம் பல மாதங்களாக முற்றுகை இடப்பட்டது. பல மாதங்கள் சீக்கியர்கள் தாக்குதல்களையும் முற்றுகைகளையும் தாங்கினர், ஆனால் இறுதியில் நகரத்தில் உணவு இருப்பு தீர்ந்துவிட்டது. சீக்கியர்கள் ஆனந்த்பூரை விட்டு வெளியேறினால், முகலாயர்கள் பாதுகாப்பான வெளியேற்றத்தை வழங்குவதாக கூறினர். அதனை குரு கோவிந்த் சிங் சம்மதித்து, தனது குடும்பத்தினருடனும் ஒரு சிறிய குழுவினருடனும் நகரத்தை காலி செய்தார். குரு கோவிந்த் சிங்கின் தாயான மாதா குஜாரி, தனது இரண்டு பேரன்களான சோரவார் சிங், பதே சிங் மற்றும் குடும்ப வேலைக்காரர் கங்குவை உடன் அழைத்துக் கொண்டு தனது சொந்த கிராமமான சஹேதிக்கு சென்று கொண்டிருந்தார். முகலாயர்களால் லஞ்சம் பெற்ற வேலைக்காரர் கங்கு, குரு கோவிந்த் சிங்கின் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களையும் சிர்இந்த்-பதேகர் என்ற இடத்தின் நவாப் வசீர் கான் முன்னிலையில் அழைத்துச் சென்றார்.

குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்களான பதே சிங் (வயது 6) மற்றும் சோரவார் சிங் (வயது 10) இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறினால் உயிருடன் விட்டுவிடுவதாக நவாப் வசீர் கான் கூறினார். ஆனால் இரண்டு சிறுவர்களும் இசுலாம் சமயத்திற்கு மதம் மாற மறுத்தனர். வசீர் கான் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். குழந்தைகள் இருவரையும் உயிருடன் வைத்து செங்கல் சுவரை எழுப்பி மூடி கொல்லப்பட்டனர்.[1] பதேசிங் குருத்துவார் கோயிலில் இக்குழந்தைகள் உயிருடன் கொல்லப்பட்ட செங்கல் சுவர் அடையாளம் இன்றும் காணப்படுகிறது.

குரு கோவிந்த் சிங்கின் மறைவிற்குப் பின்னர் கால்சா சீக்கிய இராணுவத்தில் பணியாற்றிய பண்டா சிங் பகதூர் என்பவர் இரண்டு சீக்கிய குழந்தைகளை உயிருடன் கொன்ற வசீர் கானை சிர்இந்த்-பதேகர் போரில் தலையை துண்டித்துக் கொன்றார்.[2

Thanks wikipedia

God Wishes

https://www.quora.com/profile/RK-Sharma-51

https://www.quora.com/profile/RK-Sharma-51

Interested in God, His creations and His Designs for us

I think, you should have seen it yourself. The former sentence has a letter less in it.

What more you want to know ?. Anything about God ? So, listen. God is not bothered by these man made things. Please read the following also about God ::

It is a good thing that you are thinking about God. He is our creator and of all other things in the universe. He runs everything as per his will. He has design for everything. We are actually a part of God which is known as “soul”. It has a very long life, which could be of thousands of years. At the end, it goes back and merges in God. During its existence, it takes (God gives) many bodies and God gets His things done by these bodies. So, these nodies i.e. we are actually tools in the hands of God to be used by him in the way he wants. Had the God not given us brain and mind, we won’t have known all these things. He likes us to think and has given us freedom to think to the extent that if we want we may even reach Him.

When we are able to meet Him, we understand his things much better. One great advantage is that we can communicate with Him; pray, especially for others for something or even for self and He listens and grants the same if it does not alter his designs substantially ; and gives us ability to read most of His designs. Praying for self is not required because He takes care of everything in case of those whom he has given Darshan, but no harm, if can not resist to pray for self. Darshan is a Hindi language word very appropriate for God sighting or for God revealing Himself. However, God giving us Darshan does not mean that we have become some big person. We remain the same. It is his grace bestowed on the individual who becomes worry free and remains in a blissful state even without doing any thing. (This actual Darshan is different from the virtual Darshan in which, the good doers say that they see God in the satisfied faces of the beneficiaries of their good work. One gets bliss in the virtual Darshan also but it is till one is immersed in his good work).

Important on SOUL and spirituality—One very important matter to know is that when the soul is about 2–3 incarnations away from the end, it starts craving for going back to God. This craving leads to “becoming spiritual”. So, this thing comes about only at the right time as willed by God. Hence those not interested in spirituality should not be forced for it because their time for it might have not yet come. One last thing. No religion is necessary in what has been told here. However, it does not mean that give up religion. Religion is good for many matters and hence need not be rejected.

                             – Thanks R.K. Sharma

Design a site like this with WordPress.com
Get started