எந்த ஹோரையில் என்னசெய்ய வேண்டும்?
காலையில், சூரிய உதயம் ஆரம்பம்ஆகும் பொழுது, அன்றைய தினம்என்ன கிழமையோ, அந்தகிரகத்தின்ஹோரையே, முதல்ஹோரை அல்லது ஹோரை ஆரம்பம்ஆகும். உதாரணமாகஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிமுதல் 7 மணி வரை சூரிய ஹோரைஆரம்பம், திங்களன்று சந்திரஹோரை, செவ்வாய் அன்றுசெவ்வாய்ஹோரை, புதனன்று புதன்ஹோரை, வியாழன் அன்று குருஹோரை, வெள்ளி அன்று சுக்கிரஹோரை, சனியன்றுசனி ஹோரைஆரம்பமாகும்.
ஹோரைகளைக் கணக்கிடும்போது,அன்றைய சூரிய உதயத்தில் இருந்துதான் கணக்கிட வேண்டும்.ஒவ்வொரு ஹோரையும் கொடுக்கும்சுப மற்றும் அசுபபலன்கள் உள்ளன.ஹோரையினால் ஏற்படும் பாதிப்பைவைத்துதான், அதனை ஹோரைதோஷம் என்கிறோம். இதற்கு அந்தஹோரைக்கு, கிரகத்திற்கு உரியதெய்வத்தை வணங்கி, உரியபரிகாரத்தைச் செய்யலாம். மற்றபடிமற்ற தோஷங்களைப் போல,ஹோரை தோஷம் பெரிதாகபயப்படக் கூடியது அல்ல.
இப்போது ஒவ்வொரு ஹோரைக்கும்அது கொடுக்கும் பலன்களைப்பற்றியும் பார்ப்போம்.
சூரிய ஹோரை :-
ஏதாவது ஒரு பணியில் சேர,காரியத்தில் இரங்க, பெரியமனிதர்களைச் சந்திக்க, வீடு,வாகனம் வாங்க பத்திர பதிவு செய்ய,சொத்து தொடர்பான உயில் எழுத,யாரிடமாவது நமக்காக சிபாரிசு,ஆலோசனை பெற,சூரியஹோரையைத் தேர்ந்தெடுத்தால்,அது வெற்றிகரமாக முடியும்,எக்காரணம் கொண்டும், சூரியஹோரையில் வீடு குடி போகக்கூடாது.
சந்திர ஹோரை:-
புதிய தொழில் தொடங்க, வர்த்தகம்தொடங்க, தீர்த்த யாத்திரை செல்ல,வெளிநாடு செல்ல, சந்திரஹோரைசிறப்பானதாகும்.கிருஷ்ணபட்சசந்திரனாக இருந்தால், அதாவதுதேய்பிறை சந்திரனாகஇருந்தால்,மேற்கூறியவற்றைதவிர்ப்பது நல்லது.
செவ்வாய் ஹோரை:-
பொதுவாகவே நம்மில் பலரும்செவ்வாய் கிழமையை, நல்லகாரியங்களுக்குத்தவிர்த்துவிடுவார்கள். அதே போலசெவ்வாய் ஹோரையில், நல்லகாரியங்களை செய்யாமல் தவிர்ப்பதுநல்லது. எந்தக்காரியத்தைச் செய்யும்போதும், நாம் பேசுகின்ற பேச்சுகளோ,நமக்கு இடைஞ்சலைஏற்படுத்துவிடும் என்பதால்,இனியசொற்களை, நேர்மறையானவார்த்தைகளைப் பயன்படுத்தினால்,கெடுதல் வராமல் தவிர்க்கலாம்.
புதன் ஹோரை:-
தகவல் தொடர்பு மூலமாக ஆதாயம்கிடைக்க உகந்த ஹோரை, புதன்ஹோரை என்பதினால் போன்,பேக்ஸ்,இ–மெயில், இன்டர்நெட்ஆகியனவற்றை, நமது தொடர்புக்குப்பயன்படுத்தினால்நிச்சயமாக பலன்கிடைக்கும்.ஏதாவதுபிரச்சனைகளுக்காக வழக்கு பதிவுசெய்ய வேண்டுமென்றால்வழக்கறிஞரை, இந்த ஹோரையில்பார்ப்பதுநல்லது. கதை கட்டுரைகள்எழுத, ஜாதகம் பார்ப்பதுகூட, இந்தநேரத்தில் பார்க்கலாம். புதியகணக்குதொடங்கலாம்.நிலம் வாங்க,பெண் பார்க்க, திருமணம் விஷயமாகபேச்சு வார்த்தைகள் நடத்தக் கூடாது.
குரு ஹோரை:-
ஆடை, ஆபரணங்கள் வாங்க,திருமாங்கல்யத்துக்கு தங்கம் வாங்கஏற்ற நேரம் குரு ஹோரை.பொதுவாககுரு ஹோரையில், உது செய்தாலும்அது நல்ல பலனையே கொடுக்கும்.நகை வேலை செய்பவர்கள்,நகைக்கடை நடத்துபவர்கள், இந்தஹோரையில் தொழிலைஆரம்பிக்கலாம். விவசாயம்செய்யவும் ஏற்ற நேரம்.வீடு,மனைவாங்க, விற்க உகந்த ஹோரை குருஹோரை, ஆனால் எதுவும்சட்டத்திற்குப் புறம்பானதாகஇருக்கக்கூடாது.சுக்கிர ஹோரை:-சுபகாரியங்களுக்கு ஏற்றஹோரையாகும். திருமணத்திற்குபெண் பார்க்க, சாந்திமுகூர்த்தத்திற்குஉகந்த நேரம்.விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகள்,புதிய வாகனம் வாங்க, சுக்கிரஹோரை ஏற்றது. இந்த ஹோரையில்காணாமல் போன பொருட்கள், மேற்குதிசையில் சில நாட்களிலேயேகிடைத்துவிடும். கடன் மட்டும்கொடுக்கக்கூடாது.
சனி ஹோரை:-
சனி ஹோரையை அசுப ஹோரைஎன்றும் சொல்வார்கள். இருந்தாலும்,இந்த ஹோரை, ஒருசிலகாரியங்களுக்கு சிறப்பானபலனைத் தரும். கடனைஅடைப்பதற்கும் ஏற்ற ஹோரை இது.இந்த ஹோரையில் கடனைஅடைத்தால், திரும்பவும் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படாது.மருத்துவமனைக்குச் செல்லுதல்,அறுவைச்சிகிச்சை செய்தல்போன்றவற்றை இந்த ஹோரையில்செய்யவே கூடாது.ஊழ்வினைக்கான(பூர்வ ஜென்மபாவத்திற்கான) பூஜை,பாத யாத்திரை, நடைப்பயணம்மேற்கொள்வது, மரக்கன்று நடுவது,விருட்சங்கள்அமைப்பது,அணைக்கட்டு போன்றபொறியியல் பணிகளைதீர்மாணிப்பது போன்றபணிகளுக்கும் ஏற்ற ஹோரை தான்.
குரு, சுக்கிர, சூரிய, வளர்பிறைசந்திரன் ஆகியன சுப ஹோரைகள்என்றும், செவ்வாய், சனி, கிருஷ்ணபட்ச அதாவது தேய்பிறை சந்திரஹோரை முதலியன அசுபஹோரைகளாவும் கருதப்படுகின்றன.
ஜோதிடர்களுக்கு ஹோரை பற்றித்தெரிந்திருக்க வேண்டியது மிகவும்அவசியம் என்று சொல்லப்படுகிறது.ஏனெனில் ஹோரையைவைத்துத்தான், நல்ல நாளில் முக்கியநல்ல நேரத்தைக் கணக்கிடவேமுடியும்.தவக்கிரங்களில்,ஒன்றுக்கொன்றுகடும் பகை கிரகங்களும் உண்டு.அதனை மனதில் கொண்டுதான்ஜோதிடர்கள் ஹோரையைத்தேர்ந்தெடுப்பார்கள்.
குரு ஹோரை, ஹோரைகளிலேயேசிறந்த ஹோரை, உன்னதமான,சிறப்பான ஹோரைஎன்றாலும்,வெள்ளிக்கிழமை, குருஹோரையைத்தேர்ந்தெடுக்கக்கூடாது. ஹோரைதோஷத்தினால் அல்லதுபாதிப்பினால் ஏற்படும்விஷயங்களை, நீங்களேஉங்களுடையஅன்றாடவாழ்க்கையில்பார்த்திருப்பீர்கள். மனிதவாழ்க்கையில் ஹோரைகளின்பங்களிப்பு சிறப்பானது.
நம்மை அறியாமலே ஓரைகளின்கதிர்வீச்சை உணர முடியும், அதைஉணர்ந்து நடந்தால், நலம்பெறுவீர்கள். குறிப்பாக, கணவன்,மனைவி ஏதாவது வாக்குவாதம்செய்யத் துவங்கினால், செவ்வாய்அல்லது சனி ஹோரை வந்தால்,அடக்கி வாசியுங்கள்,இல்லையெனில் அது மிகப்பெரியதகராறு ஆகிவிடும். கணவன்,மனைவி என்றில்லை, அனைத்துபேச்சுவார்த்தைகள்,விவாதங்களுக்கும் இது பொருந்தும்.ஹோரை என்பது காலத்தின் ரகசியகணக்கு, அதனைத் தெரிந்துவைத்துச் செயல்பட்டால் நல்லது.நல்ல நேரம் பார்த்து, நல்ல ஹோரைபார்த்துச் செய்யும் காரியங்கள், மிகமோசமான தசை, புத்தி காலத்திலும்,உங்களுக்கும் கை கொடுக்கும்,ஹோரை அறிந்து நடப்பவரை,யாரும்ஜெயிக்க முடியாது, என்பது சித்தர்கள்வாக்கு.