தத்துவங்கள் 96 கீழே அதன் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது , இது ஒவ்வொருவரும் யோகா சாதனையின் மூலம் உணரக்கூடியதே , முழுவதும் உணர்ந்தால் தான் நன்கு புரியவும் வரும் , யோக சாதனையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் .
ஞானேந்திறியம் – 5
பொறி – 5
புலன்கள் – 5
கர்மேந்திரியம் – 5
அந்தக்கரணம் – 4
ஆக
தத்துவங்கள் – 24
வித்யா தத்துவம் – 7
சிவ தத்துவம் – 5
பிற கருவிகள் – 60
மொத்தமாக 96 தத்துவங்கள்
————————————————————————————-
சற்று விரிவாக :
பூதங்கள் 5
ஞானேந்திறியம் 5
ஞ்யநேந்திரிய கிரியைகள் 5
கன்மேந்திரியம் 5
கன்மேந்திரிய கிரியைகள் 5
அறிவு1
கரணம் 4
நாடி 10
வாய்வு 10
ஆசயம் 5
கோசம் 5
ஆதாரம் 6
மண்டலம் 3
மலம் 3
தோஷம் 3
ஈஷனை 3
குணம் 3
விராகம் 8
வினை 2
அவஸ்தை 5
மொத்தமாக 96
தனி தனியாக தத்துவ விளக்கம் :
பூதங்கள் 5 விளக்கம் :
1 . ஆகாயம் : பரவெளி – நிறம் – ஸ்படிகம் , இதன் கூறுகள் : காமம் , குரோதம் லோபம் , மோஹம் , மதம் ; மொத்தமாக 5
2 . வாய்வு : காற்று – நிறம் – புகை , பச்சை , ஸ்படிகம் . இதன் கூறுகள் : இருத்தல்,நடத்தல் ,ஓடல் ,கிடத்தல் ,நிற்றல் மொத்தமாக 5
3 . தேயு : நெருப்பு / அக்னி – நிறம் – சிகப்பு , இதன் கூறுகள் : பயம் , அகங்காரம் , சோம்பல் , நித்திரை , மைதுனம் ; மொத்தமாக 5
4 . அப்பு : ஜலம் – நிறம் – ஸ்படிக வெள்ளை . இதன் கூறுகள் : உதிரம் , மச்சை , சிறு நீர் , மூளை , சுக்கிலம் ; மொத்தமாக 5
5 . பிருதிவி : மண் – நிறம் – பொன்மை . இதன் கூறுகள் : மயிர் , தோல் நரம்பு , எலும்பு , இறைச்சி மொத்தமாக 5
ஞ்யநேந்திரியம் 5 விளக்கம் :
1 . சுரோத்திரம் – காது சப்தங்களை கேட்கும்
2 . த்வக்கு – மேல் தோல் – ஸ்பரிச உணர்வு
3 . சட்சூ – கண் – ரூபங்களை பார்க்கும்
4 . சிங்குவை – நாக்கு – அறுசுவைகளை அறியும்
5 . ஆகிரணம் – நாசி – வாசனைகளை அறியும்
ஞ்யநேந்திரிய கிரியைகள் 5 விளக்கம் :
1 . சப்தம் – செவியில் நின்று கேட்பது
2 . ஸ்பரிசம் – தேகத்தில் , சர்மத்திலிருந்து சுகமென்பதை தெரிவிக்கும்
3 . ரூபம் – கண்ணில் நின்று பல காட்சிகளை காண்பிக்கும்
4 . ரசம் – நாவில் நின்று அறுசுவையின் பேதங்களை அறிவிக்கும்
5 . கந்தம் – நாசியில் இருந்து வாசனை பேதங்களை உணர்த்தும்
கன்மேந்திரியம் 5 விளக்கம் :
1 . வாக்கு – வாய் – பேசுவது
2 . பாணி – கை – ஆட்டி அசைத்து வேலை செய்தல்
3 . பாதம் – கால் – நடத்தல்
4 . உபஸ்த்தம் – நீர் வரும் குறி – காம சுகம் அனுபவித்தல்
5 . குதம் – பாயுரு – ஆசனவாய்
கன்மேந்திரிய கிரியைகள் 5 விளக்கம் :
1 . வசனம் – வாயில் இருந்து பேசுவிப்பது
2 . தானம் – கையில் இருந்து கொடுப்பது
3 . கமனம் – காலில் நின்று நடத்துவிக்கும்
4 . ஆனந்தம் – லிங்கம் , யோனியில் நின்று கர்மானந்தம் விளைவிக்கும்
5 . விசர்ஜனம் – அபானத்தில் நின்று மலத்தை வெளியேற்றும்
அறிவு 1 விளக்கம் :
1 . அறிவு அல்லது உள்ளம் . இது ஆகாயத்தின் அம்சம் , ஆகையால் உச்சியில் இருந்து சகலத்தையும் செயல்விக்கும்.
நாடிகள் 10 விளக்கம் :
1 . இடகலை – வலது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி இடது நாசியை பற்றி நிற்கும்
2 . பிங்கலை – இடது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி வலது நாசியை பற்றி நிற்கும்
3 . சுழுமுனை – குதத்தை பற்றி நின்று ஏறி பிராண வாயுவை சேர்ந்து சிரசளவு முட்டி நிற்கும்
4 . சிங்குவை – உண்ணாக்கில் நின்று அன்ன சாரம் ஊரவும் பானத்தை விழுங்கவும் செய்யும்
5 . புருடன் – வலக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்
6 . காந்தாரி – இடக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்
7 . அத்தி – வலக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்
8 . குரு – இடக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்
9 . அலம்புடை – கண்டத்தில் இருந்து நாசியில் கசிந்து நீரை ஏற்ற இறக்க உபாயங்கள் செய்யும்
10 . சங்கினி – உபஸ்தத்தில் இருந்து ஆனந்தத்தில் மிஞ்ச வொட்டாமல் காக்கும்
வாயு 10 விளக்கம் :
1 . பிராணன் – மூலாதாரத்தை சேர்ந்து மேல் நோக்கி இதயத்தில் நின்று நாசியில் சென்று திரும்பி அலையும்படி செய்யும்
2 . அபானன் – குதத்தை பற்றி நின்று ஜாடராக்கினியாய் உஷ்ணத்தை உண்டாக்கி , உண்ட அன்ன பானாதிகளை ஜீரணிக்க செய்யும்
3 . வியானன் – சர்வாங்கமும் வியாபித்து இருந்து பொருத்திடங்கள் எல்லாம் களைப்பும் தவனமும் உண்டாகசெய்யும்
4 . சமானன் – சரீரத்தின் நடுவான நாபிஸ்த்தானத்தில் நின்று ஜீரணித்த அன்ன பானாதிகளை உதிரமாக்கி ரத்த நாடிகளின் வழியாக இழுத்து சென்று சமமாக பரவி தேகத்தை வளர்க்கும்
5 . உதானன் – கண்டஸ்தானத்தில் நின்று சத்ததோடே கலந்து குரலோசை செய்ய , பேசக்கூடிய காரியத்தை செய்யும்
6 . நாகன் – வாயில் இருந்து வாந்தி செய்விக்கும்
7 . கூர்மன் – கண் ரப்பையில் இருந்து விளிக்கசெயும்
8 . கிரிதரன் – மூக்கில் நின்று குறுகுறுத்து தும்மல் உண்டாக்கும்
9 . தேவதத்தன் – மார்பில் நின்று கபத்தை சேர்த்து நெட்டி , கொட்டாவி , விக்கல் உண்டாக்கும்
10 . தனஞ்செயன் – பிராணன் நீங்கின பிறகும் 3 நாட்கள் மட்டும் இருந்து சரீரம் வீங்கி வெடித்து போவான் , அக்னியில் சுடும்போது அப்போதே போய்விடும்
ஆசயம் 5 விளக்கம் :
1 . ஆமாசயம் – அன்னம் , தண்ணீர் பருகுமிடம்
2 . ஜலாசயம் – அன்னம் , தண்ணீர் இறங்குமிடம்
3 . மலாசயம் – மலம் சேருமிடம்
4 . ஜலஞ்சயாசம் – மூத்திரம் சேருமிடம்
5 . சுக்கிலாசயம் – விந்து நிறைந்து இருக்குமிடம்
கோசங்கள் 5 விளக்கம் :
1 . அன்னமய கோசம் – ஸ்தூல சரீரத்தை அழிக்காமல் நிலைக்கசெயும் .
2 . பிராணமய கோசம் – பிராண வாயும் கர்மேந்திரியங்களும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்துடன் சேர்ந்து விவகாரம் செய்யும்
3 . மனோமய கோசம் – மலமும் கண்மேந்திரியமும் சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் சேர்ந்து செயல் படும்
4 . விஞ்ஞானமய கோசம் – புத்தியும் பொறிகளும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் செயல் படும்
5 . ஆனந்த மய கோசம் – காரண சரீரத்துக்கு ஆதாரமாக இருந்து மேற்கூறிய பிராண , மனோமய , விஞ்ஞானமய கோசத்துடன் சூட்சும சரீரம் நிலைத்து நிற்கும்
ஆதாரங்கள் 6 சிறு விளக்கம் :
1 . மூலாதாரம் – குதத்துக்கும் , குய்யத்துக்கும் மத்தியில் உள்ள திரிகோண ஸ்தானம் , தேவி வல்லபை இதற்க்கு அதிர்ஷ்டான மூர்த்தி – விநாயகர் .
2 . சுவாதிஷ்டானம் – முதுகுத்தண்டின் அடிப்பகுதி சமீபம் , ஆண்குறி அல்லது பெண்குறி அடிபகுதியில் உள்ள நாற்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி பிரம்ம தேவர் , தேவி சரஸ்வதி
3 . மணிபூரகம் – நாபிச்தானத்திற்கு மேலுள்ள பிறை போல் வளைந்த ஸ்தானம் ,இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகா விஷ்ணு , தேவி மகாலட்சுமி
4 . அனாஹதம் – ஹிருதய ஸ்தானத்தில் உள்ள முக்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி
5 . விசுத்தி – கண்டத்தில் உள்ளது , அருகோனஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி
ஆக்ஞா – முகத்தில் உள்ள புருவ மத்தி – திரிகோண உச்சஸ்தானம், இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி சதாசிவன் , தேவி மனோன்மணி
அக்னி மண்டலம் 3 விளக்கம் :
1 . அக்னி மண்டலம் – மூலாதாரத்தில் இருந்து இளகி நாபி வரையில் முயற்சி செய்யும்
2 . ஆதித்த மண்டலம் – நாபியில் இருந்து கண்டம் வரை ஸ்திரம் செய்யும்
3 . சந்திர மண்டலம் – கண்ட ஸ்தானத்தில் இருந்து புருவ மத்தி வரை ஸ்திரமாகும்
மலங்கள் 3 விளக்கம் :
1 . ஆணவ மலம் – ஸ்தூல சரீரத்தை நான்தான் என்று நினைத்து இருக்கும்
2 . காமிய மலம் – கண்ணால் கண்டவைகளை எல்லாம் இச்சிக்கும்
3 . மாயா மலம் – தனக்கு நேரும் நிலையை தானறியாமலே செய்தல் , கோபம் கொள்ளல்
முப்பிணிகள் :
1 . வாதம் – வாயுவின் கோபம்
2 . பித்தம் – அக்னியின் கோபம்
3 . சிலேத்துமம் – அப்புவின் கோபம்
ஈஷணை 3 விளக்கம் :
1 . தாரேஷனை – பெண்ணாசை ( ஆணாசை ) அதிகம் கொள்ளல்
2 . புத்திரேஷனை – புத்திர , புத்திரி மீது அதிக ஆசை
3 . அர்தேஷனை – பொருள்கள் மீது அதிக ஆசை வைத்தல்
குணங்கள் 3 விளக்கம் :
1 . சாத்வீகம் – நிறம் வெண்மை , சகலரும் மதிப்பர் , அமிர்த குணம் , இதில் லயித்து இருப்பவர் தத்துவ ஞான நிஷ்டை அடைவர்
2 . ராஜஸ குணம் – நிறம் சிவப்பு , இக்குணம் படைத்தவர் அகங்காரம் ஆணவம் உடன் இருப்பார்
3 . தாமச குணம் – நிறம் கருப்பு , இவர்கள் அதிக உணவு சோம்பல் , நித்திரை , மிகுந்த கோபம் எதிலும் நிலை இன்மை உடையவர் .
விரகங்கள் 8 விளக்கம் :
1 . காமம் – அதிக ஆசை கொள்ளல்
2 . குரோதம் – பகை கொள்ளல் , அன்பில்லாமை
3 . லோபம் – பிறர்க்கு ஈயாதவர் , கருமி
4 . மோகம் – பலவற்றிலும் ஆசைப்படுதல்
5 . மதம் – பிறரை மதியாதிருத்தல்
6 . மாச்சரியம் – மனதில் சதா விரோத எண்ணங்கள்
7 . இடும்பை – எல்லோரையும் உதாசீனபடுத்துதல்
8 . அஸ்சூயை – பொறாமைக்குணம்
அவஸ்த்தைகள் 5 ஸ்தானங்கள் :
1 . சாக்கிரம் – லலாடஸ்தானம் – ஆக்ன்யா சக்கரம்
2 . சொப்பனம் – கண்டஸ்தானம் – விசுத்தி சக்கரம்
3 . சுழுப்தி – ஹிருதயஸ்தானம் – அனாஹதம் சக்கரம்
4 . துரியம் – நாபிஸ்தானம் – மணிபூரகம் சக்கரம்
5 . துரியாதீதம் – குய்யஸ்தானம் – ஸ்வாதிஷ்டானம் , மூலாதாரம் சக்கரம்
மொத்தமாக 96 தத்துவங்கள் , இவை அனைத்தையும் அவர் அவர் அனுபவத்தில் உணர்ந்து அறிந்து தாண்டிய பிறகு , முக்தி என்னும் நிலைக்கு அடி எடுத்து வைக்கிறோம் .